அன்று அவர்கள் கல்லூரியில் கூடைப்பந்து போட்டி.... ராஜிவ்வும் கிருபாவும் விளையாட அகியும் சத்யாவும் தன் தோழிகளோடு அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்... ஆட்டம் விருவிருப்பாக சென்றுக் கொண்டிருந்தது....அகியின் கண்கள் கிருபாவையே வட்டமடித்தது.... ஒரு தடவை பந்தை பிடிக்கபோய் அவன் கீழே விழ இவளே விழுந்த மாதிரி பரிதவித்தாள்....
மேட்ச் முடிந்து அவன் நல்லபடியாக விளையாடி வெளியேரும் வரை அவள் உயிர் அவள் வசம் இல்லை என்றே சொல்லலாம்....
இப்படியாக இருவரும் தங்கள் காதலை மற்றவரிடம் கூறாமலே ஒரு வருடம் சென்றிருந்தது....
அன்று பைனல் இயர்ஸ்க்கு பேர்வெல் பார்ட்டி...
அகி.. அகி.. இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க??
நீ போ சத்யா.. நான் இன்னைக்கு காலேஜ் வரல... என்றாள் தலையை தலையனைக்குள் கவிழ்த்தபடி....
அடி வாங்க போற... இன்னைக்கு தான் நம்ம கண்டிப்பா போனும்... மறந்துட்டயா?? இனிமேல் நம்ம சீனியர்ஸ்ஸ பார்க்க கூட முடியாது.... என்றாள் வருத்தமாக..
அகியா மறப்பாள்... அவள் இன்று சோர்ந்து அமர்ந்திருப்பதற்கு காரணமே அதுதானே.... இனிமேல் கிருபாவை பார்க்க முடியாது.... என்று நினைப்பே அவளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது... சத்யா தன் கண்ணீரை பார்த்துவிடுவாளோ என்று பயந்தே அவள் குப்பறப்படுத்திருந்தாள்....
ஆனால் விதி யாரை விட்டது... சத்யா அகியை பிடிவாதமாக அழைத்து சென்றாள்...
ஹே எல்லாரும் ஆடிடோரியம் வாங்கப்பா.... பிரின்ஸியின் அழைப்பு... என்று அடுத்த கிளாஸ் பையன் அழைத்துவிட்டு சென்றான்...
அனைவரும் எழுந்து கிளம்ப அகி டெஸ்கில் கைவைத்து படுத்தாள்...
சத்யா எவ்வளவு வற்புருத்தியும் அவள் செல்லவில்லை...கடைசியாக சென்ற சத்யா கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டாள்...