♥16♥

5.2K 150 29
                                    


                  டாக்டர் கூறியதை கேட்ட மூவரும் அதிர்ந்தனர்...

                 கிருபாகர்... டாக்டர் என்ன சொல்றார்... என் தங்கம் என்ட பேச மாட்டாளா?? அய்யோ.. என்ன அண்ணானு கூப்ட மாட்டாளா?? நான் என்ன பண்ணுவேன்... என்னால முடிலயே... அய்யோ.. எனக்கு என் தங்கம் முழுசா வேணும்.... கிருபா எதாவது பண்ணுங்க.. என் குட்டி பேச முடியாம கஷ்ட படுறத நான் பார்க்க முடியாது... அய்யோ என் செல்லம் பேச முடியாம என்ன வேதனை படுறாளோ... என்று கிருபாவை கட்டிக் கொண்டு கதறினான் அர்ஜுன்...

               அவனின் கதறலில் சய நினைவுக்கு வந்த கிருபா அர்ஜுனை தட்டிக்கொடுத்தான்.. அந்த நிலைமையில் அவனால் கூட அடுத்த என்ன செய்ய என்று தெரியவில்லை...

              அர்ஜுன்.. இங்க பாருங்க... இப்ப நாம தான் அகிக்கு துணையா இருக்கனும்.... ப்ளீஸ் நீங்களே அழுதா அவள எப்படி நம்ம சமாளிக்க.. கன்டுரோல் யூவர்செப்.... என்று ஒருவழியாக அர்ஜுனை தேற்றி அகியிடம் அழைத்து சென்றான்...

             அவ்வளவு நேரம் பிரம்மை பிடித்தவள் போல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் தன் அண்ணனை பார்த்ததும் கண்ணீர் வெள்ளமாக பெருக... தன் வாய் திறந்து அண்ணா... என்றாள் கண்களில் வலியுடன்... ஆனால் குரல் தான் வரவில்லை....

            அதை பார்த்த அர்ஜுன் மீண்டும் உடைந்தான்.... ஓடி சென்று அவளை அள்ளி தன் மடியில் போட்டு கொண்டு... குட்டிமா.. குட்டிமா என்று அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.... அவளும் தாய் மடி சேரும் கன்றாக அவனிடம் ஒன்றினாள்.... இதை பார்த்த கிருபா அத்தை இருவரின் கண்களும் கலங்கின.... அவ்விருவருக்கும் தனிமை கொடுத்து வெளியேறினர்....

             கண்ணா.. டேய்.. அண்ணாவ பாரு... ஏன் டா அப்படி பண்ண???  என்ன விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு??? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்??? ஏன் டா என்ட சொல்ல கூடாத விஷயம் அப்படி என்ன உன்ன கஷ்டபடுத்துது... ஏன் டா இப்படி பண்ண... என்று அவளை மடியில் அமர்த்தி கூந்தலை வருடி கதறிக் கொண்டிருந்தான்....

அகல்யாWhere stories live. Discover now