அர்ஜுனின் பேச்சை கேட்டவளின் அழுகை இருந்த இடம் தெரியாமல் போனது... அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கோவம் தெரிந்தது... அவனை முறைத்தவள்.. உங்களுக்கு கொஞ்சமாவது மண்டைல மசாலா இருக்கா அத்தான்... என்ன அவங்க கூட போக சொல்றேங்க?? என்று இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள்...தன் துக்கத்தை மறைத்தபடியேதான் அவளை கிளம்ப சொன்னவன் இந்த பதிலை சத்தியமாக அவளிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை... அவளின் பதிலில் அர்ஜுன் பேந்த பேந்த முழிக்க.. கிருபாவும் அகியும் வயிறை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார்கள்...
அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தவன் கீர்த்தியிடம் திரும்பி.. ஏன் டா?? என்று முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு கேட்டான்...
அப்புறம்... நான் அவங்க கூட போகவா உங்கள கல்யாணம் பண்ணேன்??? நீங்க தான் எனக்கு பூஸ்ட்ல இருந்த எல்லாம் பக்கத்துல இருந்து குடுக்கனும்... எனக்கு பிராமிஸ் பண்ணிருக்கேங்க.. நியாபகம் இருக்கட்டும்... என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்...
அதை கேட்ட அகி மற்றும் கிருபா சத்தமாக சிரிக்க.. அர்ஜுனின் முகமோ இஞ்சி தின்ன குரங்கு போல் ஆனது...
பின் கிளம்பும் நேரத்தில் தங்கள் திருமண பரிசாக அர்ஜுனிற்கு சில பத்திரங்களை கொடுத்தனர் இருவரும்.... அதை திறந்து பார்த்தான் அவன்.. அதில் சூப்பர் மார்க்கெட் மொத்தம் அர்ஜுனின் பெயருக்கு மாற்றி எழுதியிருந்தது... முகத்தில் கோவம் அப்பட்டமாக தெரிய... என்னடா இது?? என்றான்...
மச்சான்.. இந்த இரண்டு வருஷம் இது எல்லாம் உன்னோடு உழைப்பு டா... நீ இல்லேனா அகி தனியா எதும் செய்திருக்க முடியாது.. இது உனக்குன்னோட காணிக்கை மச்சான்.. அகிய எனக்கு திருப்பி கொடுத்ததுக்கு... ப்ளிஸ் டா ஏத்துக்கோ என்று கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்தவிட்டு இருவரும் விடை பெற்று கிளம்பினர்...
என்ன அகி.. கீர்த்தி வெழுத்து வாங்குறா... மச்சான வேலை காரனாவே மாத்திட்டா.. என்றான் கிருபா சிரித்தபடி...