நாட்கள் விரைந்தோடியது.... அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்... ஆனால் அகியால் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.... அவளுக்கு எல்லாமுமாக கிருபா இருந்தான்... ஆனால் அர்ஜுனிற்கு தன்னை போல் ஒருவள் இல்லையே என்று கவலை பட ஆரம்பித்தாள் அவள்....இரவின் தனிமையில் கிருபாவிடம் தன் மனக்குறையை கூறிய போது.... அவன் அர்ஜுனிடம் திருமணத்தை பற்றி பேசுவதாக கூறினான்....
மறுநாள் டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தபோது கிருபா தன் அத்தையிடம் அர்ஜுன் திருமணத்தை பற்றி பேச்செடுத்தான்....
அத்தை அர்ஜுனுக்கும் திருமணம் பற்றி யோசிக்கலாமே.... அகிக்காக தானே அவன் இன்னும் முடிக்கல.. இனிமே அத பத்தி நினைக்கலாமே....
நானும் நினைத்தேன் கிருபா... அர்ஜுன் உன் மனசுல யாரும் இருக்காங்கலாப்பா???
இல்லம்மா.. யாரும் இல்ல... நீங்க யார பார்க்குறேங்களோ எனக்கு சரிதான்... என்றான் கண்களில் கனவுடன்...
அதை பார்த்த கிருபாவும் அகியும் அர்ஜுனை கலாய்த்து தங்கள் பொழுதை போக்கினர்...
அம்மா... அம்மா....
என்னடா அகி...
அம்மா... ராஜிவ் அண்ணா கால் பண்ணாங்க.... அவங்களும் சத்யாவும் பத்திரிக்கை வைய்க்க வர்றாங்கலாம்.... உங்கட்ட சொல்ல சொன்னாங்க... சத்யா அப்பா அம்மாவும் வர்றாங்கலாம்மா....
சரிடா வரட்டும்.... கிருபாவையும் அர்ஜுனையும் வீட்டுக்கு வர சொல்லு... நமக்கு நெருங்கின சொந்தம்ல....
ம்ம் சரிம்மா...
வாங்க சித்தி... சித்தப்பா... சத்யா குட்டி... வாடா ராஜிவ்... என்று வரவேற்றான் கிருபா...
வாங்க... வாங்க.. என்றார் அத்தை முன்வந்து....
அக்கா... நம்ம சத்யாக்கு அடுத்த மாதம் 16ஆம் தேதி கல்யாணம் வச்சுருக்கோம்.... கண்டிப்பா ஒரு வாரம் முன்னாடியே வீட்டுக்கு வந்துடனும்க்கா... எல்லாரும் வந்துடனும்.... என்றார் சத்யாவின் அப்பா...