ஏய் மாப்ள.. அந்த பொண்ண கூப்டு.. கண்டுக்காம போறா பாரு.... நம்ம இப்ப பீ ஜி டா.. என்றான் கவின் தன் சகாவை பார்த்து...இரு மச்சான்.. அது கிருபா சொந்தக்கார பொண்ணு... சும்மாவே நமக்கும் அவனுக்கும் ஆகாது... வேண்டாம்..
டேய் .. என்ன பெரிய இவ்வன்னா அவன்... என்ன பண்ணிடிவான்னு பார்ப்போம்... என்று கூறியபடி.. ஓய்.. இங்க வா.. என்று சத்யாவை பார்த்து குரல் கொடுத்தான்...
அன்று அகிக்கு உடம்பு முடியாதலால்.. அவள் ஹாஸ்டலில் இருக்க... சத்யா மட்டுமே கல்லூரி வந்திருந்தாள்...
கவின் ஓய்... என்றதும் யாரையோ அழைப்பதாக நினைத்து மேலும் நடந்தவளை...
அவன் கையை பிடித்து இழுத்தான்....
அடுத்த நொடி அவளுக்கு எங்கு இருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ அவன் கண்ணத்தை பழுது பார்த்தன அவள் கைகள்...
அதை பார்த்த அனைவரும் திகைத்தனர்... கவின் எல்லையில்லாத கோவத்தில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது தெரியாமல் அவளில் துப்பட்டாவை இழுத்தான்... அவள் எவ்வளவு கதறியும் அவன் ஆங்காரமாக அமர்ந்திருந்தான்...
அவள் அழுதபடியே அந்த இடத்தை விட்டு ஓடினாள்.... அவள் நேராக சென்றது கிருபாவின் வகுப்பறைதான்....
கிருபா எங்கோ சென்றிருக்க... வகுப்பில் அமர்ந்து எதோ எழுதிக்கொண்டிருந்தான் ராஜிவ்...
வகுப்பின் வாசலில் இருந்து அவனை பார்த்தவள் ராஜிவ் என்று கூவலுடன் அவனை நோக்கி ஓடினாள்...
இவள் அழகையோடு ஓடி வருவதை பார்த்தவன் திகைத்து தன் இருக்கையில் இருந்து எழுந்தான்...
அவள் ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்து கதறினாள்....
ஹேய்.. என்னடா.. என்ன ஆச்சு... ஏன் அழுற... உன் பப்சை அகி புடுங்கிட்டாளா?? சரி வடு நான் வாங்கி தரேன் என்று அவளை சிரிக்க வைக்கும் நோக்கத்துடன் அவன் பேசினான்....