♥59♥

4.4K 151 39
                                    


                ரூமில் உள்ளே வந்த அர்ஜுன் பார்த்தது கைகளை முழங்காலில் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்திருந்த கீர்த்தியையே.. அதை பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்து பின் தான் அவளிடம் சென்று விடுவேனோ என்ற பயத்தில் இப்படி அமர்ந்திருக்கிறாள் என்று எண்ணி.. கதவை தாழ்பாள் போட்டுவிட்டு சென்று சோபாவில் படுத்தான்...

                   கதவை அடைக்கும் சத்தம் கேட்டவுடன் இன்னும் சிறிது நேரத்தில் தன்னிடம் வந்து விடுவான் என்ற எண்ணத்தில் அப்படியே அமர்ந்திருந்தவள்.. அவன் வரவில்லை என்றதும் லேசாக தலை நிமிர்த்தி பார்த்தாள்.... அவனோ சோபாவில் படுத்து கண் மூடியிருந்தான்... அதை பார்த்தவளுக்கு அழுகை பொங்கியது.. தன் அத்தான் தன்னை வெறுத்துவிட்டாரோ?? என்று நினைத்தவளுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது...

                 பெட்டை விட்டு எழுந்து ஒரே எட்டில் அவனை நெருங்கியவள் அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவன் வயிற்றில் முகம் புதைத்தது வாய் விட்டு கதறினாள்...

                  கீர்த்தியை நினைத்தபடியே தூங்காமல் கண் மூடி படுத்திருந்தவன் வயிற்றில் பாரம் அழுத்தவும் கண் திறந்தான்... அதற்குள் அவன் தேவதை கதறும் குரல் கேட்டு அவளை ஒரு கையால் தூக்கி அவன் மேலேயே போட்டுக் கொண்டு... ஷ் குட்டிமா.. என்னடா?? என்றான் கரகரப்பாக...

                அத்தான்.. ஸாரி... ஸாரி... நான் வேணுனே உங்கள தள்ளி விடல.. எனக்கு... எனக்கு.. கூச்சமா இருந்துச்சு.. அதான்.. நீங்க அதுக்கு கோவப்படுவீங்கனு எனக்கு தெரியாது... தெரிஞ்சா தள்ளி விட்டுருக்க மாட்டேன்.. ஐ ஆம் ஸாரி.. என்றாள் அழுகையோடு..

                 ஹே.. குட்டிமா.. நான் கோவமா இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?? நான் கோவமாலாம் இல்ல டா.. எனக்கு உன்ன பார்க்க எப்படியோ இருந்துச்சு.. அதான்... நான் அப்ப அப்படி நடந்துருக்க கூடாது.. ஸாரி டா... அழ கூடாது.. செல்லம் ல... என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்..

                நீங்க என்ன தப்பு பண்ணேங்க??? என் பிரண்ட்ஸ்ஸோட ஹஸ்பன்ட்லாம் நிறையா பண்ணுவாங்களாம்... என்ட கேட்டாங்க தெரியுமா??? நீங்கதான் எதுமே பண்ணலயே... அதான் அப்டிலாம் இல்லனு சொல்லிட்டேன்.. ம்ம் அப்புறம் எனக்கு நீங்க பண்ணது பிடிச்சது.. என்று கூறிக் கொண்டிருந்தவள் நடப்புக்கு வந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.... அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவன் மார்பில் புதைந்தவள் அவன் வாய் விட்டு சிரித்ததில் சிணுங்கினாள்...

அகல்யாWhere stories live. Discover now