♥25♥

4.9K 156 35
                                    


                   சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த அகி.. தன் போனை எடுத்து கிருபாவிற்கு அழைத்தாள்.... அப்படியே அழைத்துக் கொண்டே இருந்தவள் பத்தாவது அழைப்பில் தொடர்பு கிடைத்தது.... ரிங் போய் கொண்டே இருக்க.... கடைசி நொடியில் போனை அடன்ட் செய்தனர்....

                 இவளும் ஹலோ.. ஹலோ.. என்று எத்தனையோ முறை சொல்ல முயற்சி செய்தாள்... ஆனால் பாவம் அவளால் பேசதான் முடியவில்லை... கண்களில் கண்ணீர் நின்ற பாடில்லை....

               ஓடி சென்று அந்த ரூமில் உள்ள டேபிலில் பேனாவை எடுத்து போனில் தட்டினால்... ஆனால் அந்த பக்கம் நோ ரெஸ்பான்ஸ்.... கிருபா கிருபா.. என்ற ஒரு வார்த்தையையே அவள் வாய் அசைத்தது.... கடைசியாக கிருபா.... கிருபா.. என்றபோது காத்து தான் வந்தது.....

                 அப்படியே அழுகையுடன் முயன்று கொண்டிருந்த போது கிருபா என்று அவள் கத்தினாள்... ஆனால் அதை உணர அவளால் முடியவில்லை... போனில் கிருபா.. கிருபா என்று கத்தினாள்... அவளால் தனக்கு குரல் வந்துவிட்டதை கூட உணர முடியவில்லை... அவளுக்குள் இருந்து ஒரே சிந்தனை கிருபா தன்னிடம் இல்லை... என்பது மட்டுமே..

             அப்போது அவளை பின்னிருந்து கிருபா அணைத்தான்.... அவளை தன்புறம் திருப்பி அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான்... ஆனால் பாவம் அதையும் அவள் உணரவில்லை.... அவள் போனை காதில் வைத்தபடி கிருபா ஜபம் செய்து கொண்டிருந்தாள்.... அவளை தன்னிலைக்கு கொண்டு வர அவளின் உதட்டை சிறை செய்தான்.... சில நொடிகளில் தன்னினைவிற்கு வந்தவன்...

               கண்ணம்மா... இங்க பாரு கிருபா டா... உன் கிருபா... இங்க பாரு...நான் இங்க தான் இருக்கேன்... எங்கயும் போல்... என்ன பாரு டா செல்லம்... என்று அவளை தன்வசம் திசை திருப்பினான்....

                அவனின் குரலில் நினைவுலகத்திற்கு வந்தவள்.. அவனை பார்த்ததும் அவனை இறுக கட்டிக் கொண்டு வாய் விட்டு கதறினாள்...

                 அவளை தன் கைகளில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு.. சென்று அறையை உள் தாழ்ப்பால் போட்டு வந்தான்....

அகல்யாWhere stories live. Discover now