🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
Episode......04
ஏய்....
சுவேதா
இப்ப தானே உங்கள எழுப்பிவிட்டு போனேன்....
மறுபடியும்
இழுத்து போர்த்துகிட்டு தூங்குறீங்க...
என்றவாறு
தாய் மாதவி போர்வையை விலக்கிவிட்டு
இருவரையும்
தட்டி எழுப்பினார்....என்னம்மா...
நீங்க
கொஞ்சம் டைம் நிம்மதியாய் தூங்க விட மாட்டிங்களா
என்று சுவேதா...
செல்லமாய்
சிணுங்கியவாறு தலையணைக்குள்
முகத்தை புதைத்தாள்....என்ன கொஞ்ச டைமா?
இப்ப என்ன டைம் தெரியுமா
ஒன்பது மணி ஆகுது
நீதான் இழுத்து போர்த்து தூங்கிறாய் என்றால்
உன்னைபோல்
அவளையும் பழக்கி வைச்சிருக்கிறாய்
என்ற மாதவி
ஏய் நிரோ...
எழும்பு அப்பா கோயிலுக்கு போக ரெடியாகட்டுமாம்
என்று மற்ற மகளையும்
தட்டி எழுப்பிட்டு....சீக்ரம்...
எழுந்து குளிச்சிட்டு ரெடியாகி
கீழ வாங்க என்ற
மாதவி கீழே ஹாலுக்கு வந்தார்....ஹாலில் சோபாவில் இருந்த சந்திரசேகர்
என்ன...
எழும்பிவிட்டாளுகள என்றார்
கீழே வந்த மனைவியை பார்த்து....ம்.ம்
எழும்பிட்டாளுகள்
சீக்ரம் ரெடியாகி வரச்சொன்னேன்
என்றவாறு
கிச்சின் பக்கம் போனார் மாதவி....
தாய்...
அறைவிட்டு போனதும்
சோம்பல் முறித்தவாறு எழுந்து கட்டிலில் அமர்ந்தாள் சுவேதா....நிலவை மூடி விலகும் முகில் போல்
கன்னத்தில்
தவழ்ந்த கருங்கூந்தலை தன்
கரம் கொண்டு ஒதுக்கினாள்....
அங்கே கன்னத்தில் அழகாய் ஒரு குழி..அப்படியே...
பக்கத்தில் உறங்கிய தங்கை நிரோவை தட்டி எழும்பினாள்..நிரோ...
எழும்பு அம்மா கோயிலுக்கு போ சீக்ரமா
வரச்சொல்லிவிட்டு...
போறாங்க ....என்னக்கா..
நீ..
என்று சிணுங்கினாள் நிரோ...அம்மா...
என்னடா என்றால் நான்தான்
உனக்கு பழக்கி வைச்சிருக்கிறேன்
என்று
சொல்லிவிட்டு போற ..
சீக்ரம் எழும்பு என்று நிரோ...
கை பிடித்து எழுப்பிவிட்டாள் சுவேதா....
