Episode..........79
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
அம்மா...
நான் சொல்லுவதையும்...
கொஞ்சம் கேளுங்க...
நான்...
இப்போ படிக்கனும் அதைவிட
வேறு சிந்தனை எனக்கு இல்லை...
எனக்கு இப்போது கல்யாணமும்...
வேண்டாம் ஒன்றும் வேண்டாம்..
அதோடு...
டாட் சொல்லுற அந்த பையன்
அவ்வளவு
என்று நல்லவனுமில்லை...
சுவேதா...
கண்ணீர் கசிந்து கூறவும்....உடனே கோபமாய் சந்திரசேகர்
காலேஜில்...
பிரண்ட்ஸ் கூட சேர்ந்தால்
அப்படியும் இப்படியும்தான் இருப்பாங்க...
கல்யாணத்துக்கு...
அப்புறம்...
அதெல்லாம் சரியாகிடும்...
என்றவர்...
சொன்ன டேட்ல நிச்சயார்த்தம் நடக்கும்
அதில்
எந்த மாற்றமும் இல்லை
படிப்பு முடிய கல்யாணம் அவ்வளவுதான்....அதன்பின்பும்...
சுவேதாவால் அங்கே இருக்க முடியவில்லை...
அழுதவாறு....
தன் ரூமுக்குள் ஓடினாள்....அதை பார்த்திருந்த அவளின் தாய்க்கும்...
நிரோவுக்கும்...
மனசே உடைந்து போனது...சந்திரசேகர்...
அதை பெரிதாய் எடுக்கவில்லை...
எல்லாம்...
சரியாகிடும் என்று சொல்லிக்கொண்டார்.......ரூமுக்குள்...
வந்த சுவேதா கதவை தாழிட்டுவிட்டு...
வந்து...
கட்டிலில் குப்புற விழுந்து
விம்மி விம்மி அழுதாள்....
சொல்லில் அடங்காத வலிகள்
அவள்
நெஞ்சை கிழித்துக்கொண்டிருந்தது...நான்...
இனி என்ன செய்வேன்...
இந்த
விதி ஏன் என்னோடு மட்டும்...
இப்படி கண்ணாம்பூச்சி ஆடுது...
தனக்கு தானே சொல்லி சொல்லி அழுதாள்....அந்த வலியிலும்
வினோத் மட்டுமே அவள் மனதில் நின்றான்...
அவனை தவிர வோறொருவனை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை...
அந்த நொடியே...
வினோத்தை போய் பார்க்கனும்
தன் மனதில் உள்ள வலிகளை
அவனிடம் சொல்லி
அழனும் போல் இருந்தது அவளுக்கு....
