பாகம்..24

228 3 0
                                    

Episode.....24

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

       மூவரும்...
பேசும் வரை   தொலைவில்...
   நின்று   அதை  பார்த்து...
உள்ளுக்குள்    எரிந்து  கொண்டிருந்த  ஆகாஷ்....

   வினோத்...
சுவேதாவிடம்  பேசிவிட்டு  சற்று  நகரவும்...
   சட்டென...
அவர்கள்  முன்னால்  போய்  சுவேதாவை  மறித்தான்....

    திடிரென்று...
எதிர்பாராமல்  அவன்  தடுக்கவும்...
   ஆயிஷாவும்...
சுவேதாவும்...
   குழம்பிபோய்   என்ன  என்பதுபோல்  அவனை...
  வெறுப்பாய்  பார்த்தார்கள்....

       அந்த...
பொறுக்கி  கூட  என்ன  பேச்சு  வேண்டி  கிடக்கு   என்றான்...
   ஆகாஷ்  கோபமாய்...

     அதை  கேட்டதும்...
சுவேதா  கண்கள்  கோபத்தில்  சிவந்தது...
   யாரை  பார்த்து
பொறுக்கி  என்று  சொல்லுறான்...
  அவனுக்கு   இரண்டு  அறை   விடவேண்டும்போல்  தோன்றியது  சுவேதாவுக்கு....

    நாங்க...
யார்  கூட  பேசினால்....
   உனக்கு  என்ன...
நீ  உன்  வேலையை  பார்த்திட்டு  போ...
    நீயே  ஒரு  பொறுக்கி   நீ  மற்றவனை  பார்த்து  பொறுக்கி 
  என்று...
சொல்லாத...
   காலேஜில...
உன்  பொறுக்கி  தனத்தை  பார்த்துகிட்டு  தானே  இருக்கிறோம்...
   ஆயிஷாவுக்கு  கடும்  வந்து...
      பேசினாள்....

     ஆயிஷா...
நண்பனுக்கு  முன்னால்  அப்படி  பேசியது...
   ஆகாஷை   இன்னும்...
கோபத்தின்   உச்சி   அடைய  செய்தது...

   நீ...
கொஞ்சம்  வாய  மூடு...
  நான்  உன்  கூட  பேசல...
நான்  இவளைதான் கேட்டேன்....
   நீ  எவன்  கூட  பேசினால்  எனக்கென்ன..
       ஆகாஷ்  உதடுகளில்...
அனலாய்  வார்த்தைகள்  உதிர்ந்தது...

    அவள்...
என்  பிரண்ட்...
   நான்   ஏன்  என்று  கேட்பேன்...
எனக்கு...
உரிமையிருக்கு
நீ  உன்   பொறுக்கி  தனத்தை  வேறு  எங்கையும்...
  கொண்டுபோய்  காட்டு...
    ஆயிஷாவும்...
அவன்  வார்த்தைக்கு  பணியாமல்  பேசிவிட்டு....
   நீ   வாடி...
என்று   சுவேதாவின்  கை  பிடித்து   கூட்டிச்சென்றாள்....
    ஆகாஷை  கடந்து....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுTempat cerita menjadi hidup. Temukan sekarang