Episode.....76
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இருவரையும்....
தன் மொபைலில் போட்டோ பிடித்து கைகளில் மறைத்த நிரோ....பாஸ்...
அது சின்னதாய்தான் முள்ளு குத்தியிருக்கும்...
நீங்க
பீல் பண்ணும் அளவுக்கு இருக்காது...
என்றாள் நக்கலாய்....உடனே....
கடித்து விடுவதுபோல் தங்கையை முறைத்தாள்....
சுவேதா....சின்னதாய்....
குத்தினால் இப்படி ப்ளட் வருமா...
என்றான்...
வினோத்...
சுவேதா கைக்கு கட்டு போட்டவாறு....அப்போது....
மாதவி அந்த பக்கம் வந்தவர்...
சுவேதா...
கைக்கு வினோத் கட்டு போடுவதை பார்த்து...
என்னாச்சுடா...
என்று பதறி அருகே வரவும்....அம்மா...
நீங்க வேற பதறாதேங்க...
அவளுக்கு....
சின்னதாய் முள்ளு குத்திட்டு....
அவ்வளவுதான் என்றாள் நிரோ...சின்னதாய்
முள்ளு குத்தினால்....
ஏன்
கைக்கு கட்டு போட்டுகிட்டு இருக்குது
அந்த பிள்ளை..
என்றவர்....
சுவேதா அருகே வந்து கையை பிடித்து பார்த்தார்......ரத்தம்...
வருது அன்ரி
அதுதான் துணியால் கட்டு போட்டேன்...
என்றுவிட்டு..
வினோத்...
சுவேதாவை விட்டு சற்று தள்ளி போகவும்...என்னது...
ரத்தம் வருதா...
பார்த்து கை வைக்க மாட்டியா....
என்ற தாய்....
நிரோவை பார்த்து...
உனக்கு எல்லாம் விளையாட்டுதான் என்று
ஏசினார்....அம்மா...
விடுங்க
ஏன் அவளை திட்டிகிட்டி இருக்கீங்க...
என்றாள்
சுவேதா....அவள்...
உன் தலையில் கல்லை போட்டாலும்...
உன் தங்கச்சியை விட்டுகொடுக்கமாட்டியே.....
தாய் கூறினார்....எப்படி...
விட்டுகொடுக்கிறது
அவள்
என் பாதி உயிர்...அப்போ....
மீதி உயிர் யாரு...
அந்த நேரத்திலும் கிண்டலாய் கேட்டாள்
நிரோ ....
