🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
Episode........13
ஏதோ மனதில்
சிறு ஆசையோடு நின்ற சுவேதாவை பார்த்த ஆயிஷா....
என்னடி
இன்னுமா தூங்கல
என்று அதட்டவும்...இல்லடி தூங்க போறேன்
என்று
கூறிவிட்டு கட்டிலில் சாய்ந்தாள்....
அடுத்தநாள்....
வழமைபோல் காலேஜ் போய்...காலேஜ் முடிந்து தோழிகளோடு வெளியே வந்து கொண்டிருந்தாள் சுவேதா...
அப்போது...
காலேஜ் வெளியே இருந்த பூக்கடையை
பார்த்த சுவேதாவின்
தோழி...
அந்த பூக்கடை பக்கம் போய் வருவோமா
என்று
சுவேதாவையும் அவள் தோழிகளை கூட்டிக்கொண்டு அந்த கடைக்கு போனாள்....அந்த கடையில்
அந்த நேரம் வினோத் தான் இருந்தான்
அந்த பூக்கடை பெரியவர்
ரீ குடிக்க போகும்போது வினோத்தை கூப்பிட்டுவிட்டு போனார்....பூக்கடையை நெருங்கிய...
சுவேதா அவள் தோழிகள் வினோத்தை கண்டு சட்டென நின்றுவிட்டனர்...
அதில் வினோத்துக்கு பஸ்சில் வைத்து அடித்த பெண்ணும் நின்றாள்.....வினோத்தும்...
அவர்களை கண்டுவிட்டு
சின்ன சிரிப்போடு வாங்க என்றான்....ஆயிஷா...
பக்கத்தில் நின்றவளை தட்டி
மச்சி அன்றைக்கு பஸ்சில் வைத்து மயூரிக்கு அடித்த பையன் தானே அது என்றாள் ....அவளும்...
ம்.ம் என்றாள்....வினோத்...
சிரித்தும் அவர்கள் வெறுப்போடு நிற்க்கவும்....வினோத்தே...
கடையை விட்டு வெளியே வந்து
அவர்கள் முன்னால் நின்றான்...பின்பு
அவர்களை பார்த்து என்ன கடைக்கு வந்திட்டு
இப்படி பார்த்திட்டு நிற்க்கிறீங்க..
என்று சொல்லி சிரித்தான்....பஸ்சில்....
தங்களோடு பேசியவனுக்கும்
அப்போது சிரித்து பேசிக்கொண்டிருந்தவனுக்கும் நிறைய வித்தியாசம் கண்டு...
சுவேதாவும் அவள் தோழிகளும்...
குழம்பி போய் நின்றனர்...
