பாகம்..46

180 5 0
                                    

Episode......46

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

       சுவேதா...
தன்னை  சுற்றி  நடப்பதையே  மறந்து  நின்றாள்...

   அப்போதே...
நிரோவுக்கு  புரிந்துவிட்டது...
தன்  அக்காவின்  மனதில்  இருப்பதும்  இந்த  வினோத்
  தான்  என்று...

   என்ன  ஆச்சரியம்   இன்னும்  கூட..
நிரோவால்
   அதை  முழுதாய்  நம்பமுடியவில்லை...
அன்று...
   விளையாட்டுக்கு  உன்னை  கட்டிக்கபோறவன்...
   என்று  சொன்னோம்...
இன்று...
   நிஜமாகவே  சுவேதா  மனதில் 
வினோத்
   இருப்பது...
அந்த  இறைவனின்  செயல்  இன்றி
  வேறேது...
அதை  நினைக்கும்போது..
   அதிக  சந்தோஷம்
நிரோ  மனதில்...

   அங்கு...
நிறைந்த  அதிர்ச்சியான  நிகழ்வுகளை..
  மாற்றி...
நிஜத்து  கொண்டுவர  நினைத்த 
  ஆயிஷா....

   அப்போ...
அந்த   ஸ்டோபரி  ஐஸ்கீறிம்...
   இவர்தானே...
நிரோவிடம்  வேண்டுமென்றே  கேட்டாள்...
   வினோத்தான்
என்று  தெரிந்தும்  நக்கலாய்...

   நிரோவும்...
ஆமா  ஆமா  என்றாள்
  சந்தோஷத்தில்....

    என்ன  ஸ்டோபரி...
வினோத்  புரியாமல்  கேட்டான்..
  ஆச்சரியமாய்....

   அது...
ஒரு  பெரிய  கதை  என்று
  சொல்லி  ஆயிஷா  சிரிக்கவும்...

அதுதான்....
என்னென்று  கேட்கிறேன்...
   புரியாமல்  வினோத்  சிரித்தவாறு...

அன்றைக்கு...
இவளுக்கு  நீங்கதானே  ஐஸ்கிறீம்  வாங்கி  கொடுத்தீங்க...
   அப்போ...
உங்களுக்கு  ஸ்டோபரி  ரொம்ப  பிடிக்குமென்று...
   ஒரு  ஸ்டோபரியும்  வாங்கி  கொடுத்தீங்க..
அதுதான்...

   ம்.ம்...
பிடிக்குமென்று  சொன்னேன்
   அதுக்கென்ன...

அதுக்கென்னவா...
உங்களை  போல்  சுவேதாவுக்கு...
   ஸ்டோபரி  என்றால்
ரொம்ப  பிடிக்கும்...
   அவளுக்கு  பிடித்ததை  அவள்
  யார்  என்று  தெரியாமலே...
   வாங்கி  கொடுத்தீங்க...
சுவேதாவே   ஆச்சரியபட்டு  போனாள்
   நாங்களும்  கூட
என்று...
   ஆயிஷா  கூறவும்...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now