Episode........91
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
சுவேதா...
வினோத் எங்கே என்று கேட்கவும்...
மயூரி...
ஒருநொடி
என்ன பதில் சொல்வதென்று யோசித்தாள்....பின்...
தன் மனதை ஒருமாதிரி அமைதிபடுத்திவிட்டு.....
வினோத்...
எங்கே என்று தெரியலடி...
நீ..
மயங்கி கிடந்தாய்...
போலீஸும் நானும்தான்...
சேர்ந்துதான்
உன்னை..
இங்கு கொண்டுவந்து சேர்த்தோம்...
என்றாள் மயூரி....என்ன...
சொல்லுறாய்...
வினோத் வரவில்லையா...
அவர்...
என்னை தனியே விட்டு
எங்கும்
போயிருக்கமாட்டாரு...
அவருக்கு என்னாச்சு...
சுவேதா...
விழிகள் கலங்கியது...இல்லடி...
என்றாள் மயூரி..
வலிக்கும் தன் மனதை மறைத்தவாறு...ஐயோ...
கடவுளே
வினோத்துக்கு என்னாச்சு...
சுவேதா அழுதாள்...ப்ளீஸ்...
நீ அழாத...
அவருக்கு எதுவும் ஆகியிருக்காது.....ஆமாம்..
நான் மயங்கிய பின்பு
அங்கு என்னதான் நடந்தது...
நீ எப்படி அந்த இடத்துக்கு வந்தாய்..
விழி கலங்கியவாறே...
சுவேதா கேட்கவும்...உன்னை...
ஆகாஷ் அவன் வண்டியில் கடத்திட்டு போவதை பார்த்திட்டு...
வினோத்கிட்ட போய் சொன்னது...
நான்தான்...
அவர்தான்
என்னை அந்த இடத்துக்கு கூட்டி வந்தாரு.....
என்னை..
வெளியே விட்டு..
உள்ளே உன்னை தேடி வந்தவர்...
ரொம்ப நேரமாகியும்...
வெளியே வரல
அதுதான்
என்னாச்சோ ஏதாச்சோ என்று
உள்ளே வந்து பார்த்தேன்...
நீ மயக்கி கிடந்தாய்...
அங்கு வினோத்தையும் காணல
அந்த பொறுக்கிங்களையும் காணல
உடனே..
போலீஸும் அங்கு வந்திட்டாங்க...
அவங்களோடு சேர்ந்து..
மயங்கி கிடந்த
உன்னை இங்கு கொண்டு வந்திட்டேன்...
வேறு..
எதுவும் தெரியாது
என்றாள் மயூரி...
வினோத்துக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்துக்காக...
தன் மனசை கல்லாக்கி கொண்டு....
