லியா பயந்து போய் நிற்க...
சுந்தர் வேகமாக வெளியே செல்ல...
உத்தமா : "டேய்... டேய்... நில்லு டா... எங்க டா போற..."என்று அவனும் வெளியே சொல்ல முயல...
ஜெரோம் அவனை பிடித்து உள்ளே தள்ளி விட்டான்...
அவன் தள்ளி விட்டதில் தடுமாறி சுவற்றில் மோதி நின்றான்...
ஜெரோம் : லியா நீ கீழ போ...
லியா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்...
உத்தமா : எதுக்கு டா அவளை போக சொல்றேன்... நா அவ கிட்ட பேசனும்...
லியா : என்ன நடக்குது... எனக்கு ஒன்னுமே புரியல...
உத்தமா : "என்ன டி புரியல உனக்கு... சுந்தர்..."என்று சொல்ல வர...
ஜெரோம் அவன் வாயை பொத்தி அவனிடம் கொடுத்த செயினை எடுத்து "இந்தா மா... கீழ அறிவு அண்ணா இருப்பாரு... அவரை கூட்டிட்டு போய் அடகு வச்சுட்டு வா..."என்று சொல்ல...
லியா : நா கீழ போறது இருக்கட்டும்... முத இங்க என்ன நடக்குது னு எனக்கு சொல்ல போறீயா இல்ல... நா தான் பணம் ready பண்ணி தரேன் னு சொல்லிட்டேனே... அப்புறம் ஏன் இவன் இப்படி கோவப்படுறான்... என்ன ஆச்சு... வேற எதுவும் பிரச்சனை யா... என் கிட்ட எதுவும் மறைக்கிறீயா...
உத்தமா : ஏ... ஆமா டி... பிரச்சனை தான்... உன்னால தான் டி...
ஜெரோம் : டேய்... இப்ப நீ வாய மூடுறீயா இல்லையா...
உத்தமா : என்னைய அடக்குறீயா... நா தப்பு பண்ணல... இவ... இவ தான்... இவளால தான் நா இப்படி இருக்கேன்...
லியா : நீ என்ன பண்ணேன்... இது வரைக்கும் உனானைய எதிர்த்து கேள்வி கேட்டு இருப்பேனா... இல்லையே... தேவை இல்லாம எதுக்கு என் கிட்ட கோவப்படுற... அப்படி நா என்ன பண்ணேன்...
உத்தமா : என்னது என்ன பண்ணியா... நீ என்ன பண்ண னு உனக்கு தெரியாது....
ஜெரோம் : "லியா அந்த செயினை என் கிட்ட கொடு..."என்று அவளிடம் இருந்து பிடிங்கி கொண்டு "நீ வா டா...நம்ம பொய் அடகு வச்சுட்டு வரலாம்..."என்று உத்தமா இழுத்து கொண்டு செல்ல...

أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???