சுந்தர் ஜெரோமை பார்த்து கொண்டு இருக்க...
மாடியில் இருந்து சைகை செய்த உத்தமா வை கவனிக்க வில்லை...
ஜெரோம் நேராக சுந்தர் அருகில் வந்து நின்று "Hi நீ சுந்தர் தானே..."என்று கேட்க...
சுந்தர் : ஆமா...
ஜெரோம் : ம்ம்ம்... நா ஜெரோம் உத்தமா friend...
சுந்தர் : yeah... I know உங்களை உத்தமா கூட பாத்து இருக்கேன்...
ஜெரோம் : நானும் உங்களை பாத்து இருக்கேன்... ஆனா பேசுனது இல்ல...
சுந்தர் : நானும் தான்...
ஜெரோம் : என்ன இந்த பக்கம்...
சுந்தர் : இல்ல உத்தமா வ பாக்க வந்தேன்...
ஜெரோம் : நானும் உத்தமா வ தான் பாக்க வந்தேன்... But அவன் தூங்கிட்டு இருக்கான்... ஒன்னு பண்ணுவோம்... நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம்... எனக்கும் time pass ஆகும்.. உனக்கு ok தானே...
சுந்தர் :No problem... வாங்க பேசிட்டே போலாம்...
ஜெரோம் : just ஒரு walk மாதிரி போயிட்டு வரலாமே...
சுந்தர் : "sure..."என்று bike நிறுத்தி விட்டு அவனுடன் நடந்தான்...
சிறிது தூரம் இருவரும் எதுவும் பேசாமல் நடந்தனர்...
ஜெரோம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்...
ஜெரோம் : உங்க கிட்ட ஒன்னு கேட்பேன் கோவப்பட கூடாது...
சுந்தர் :"அப்படி என்னத்தை கேட்க போறான்..."என்று யோசித்து கொண்டே"இல்ல கேளுங்க..."என்று கேட்க...
ஜெரோம் : உத்தமா வ எதுக்கு பாக்க வந்த...
சுந்தர் : அது அவன் தான் வர சொன்னான்...
ஜெரோம் : எதுக்கு...
சுந்தர் : எங்கேயோ வெளிய போகனும் னு சொன்னான்...
ஜெரோம் : எங்க போகனும்...
சுந்தர் :"அது வந்து..."என்று சொல்ல வாய் எடுக்க "டேய் சுந்தர் யார் கிட்டேயும் சொல்லாத டா..." என்று உத்தமா சொன்னதும் ஞாபகம் வர...
அப்படியே பேச்சை மாற்றி "இல்ல சும்மா அப்படியே வெளியே போயிட்டு வரலாம் னு சொன்னான்... அது தான் வந்தேன்..."என்று பெருமூச்சு விட...

ВЫ ЧИТАЕТЕ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Художественная прозаஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???