பொழுது விடிந்ததும் அறிவு ஜெரோம் ஹெரால்டுக்கு call செய்து வர சொல்ல...
வீட்டுல உள்ள அனைவரும் பதற்றமாக...
ஹெரால்டு அனைவரையும் சமாதானம் செய்து விட்டு ஜெரோமை அழைத்து சென்றான்...
ஜெரோமும் ஹெரால்டும் bike வேகமாக வந்தனர்...
உத்தமா வாசலில் விழுந்து கிடக்க...
அவனை பார்த்தவாறு இருவரும் உள்ளே சென்றனர்...
முத்துராமன் அறிவு நல்லா பாரதி நால்வரும் அமர்ந்திருக்க...
பாரதி மடியில் ஜோயல் தூங்கினான்...
ஹெரால்டு பார்வையை சுழற்றி லியாவை தேடினான்...
பாரதி அவன் பார்வையை புரிந்து " லியா உள்ள தான் இருக்கா... தூங்குறா..."என்று சொல்ல...
ஜெரோம் : என்ன ஆச்சு... அவன் ஏன் வெளிய படுத்து கிடக்குறான்...
ஹெரால்டு லியா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்...
ஹெரால்டு லியா அருகில் சென்று பார்க்க... அவன் வீங்கி விரல் தடம் பதிந்து இருந்தது...
அதை பார்த்து அதிர்ந்தவன்... கோவத்துடன் வெளியே வந்து "என்ன நடக்குது இங்க... என் தங்கச்சி ஏன் அப்படி இருக்கா..."என்று கத்த...
நால்வரும் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக தலை குனிந்து இருந்தனர்...
ஜெரோம் :"என்ன டா..."என்று உள்ளே சென்று பார்த்து விட்டு கோவமாக வந்து "என்ன பா இது..."என்று கேட்க...
முத்துராமன் கை கூப்பி "எங்களால இவனை எதுவும் பண்ண முடியல... நாங்க சொல்றத எதுவுமே கேட்க கூடாது னு முடிவு ல இருக்கான்... நாங்களும் முடிஞ்ச அளவுக்கு அந்த பொண்ணை பத்திரமா தான் பாத்துக்குறோம்... இருந்தாலும் அவன் கிட்ட இருந்து பத்திரப்படுத்த முடியல... உங்க பொண்ணை நீங்க கூட்டிட்டு போங்க...இவனுக்கு வாழ்க்கைய வாழ தெரியல..."என்று தலை குனிந்து சொல்ல...
ஜெரோம் வேகமாக அவர் அருகில் வந்து கையை பிடித்து "என்ன பா நீங்க...நாங்க சின்ன பசங்க... எங்க கிட்ட போய் கை கூப்பி வேணாம் பா..."என்று பல்லை கடித்தவாறு வெளியே வந்து கீழே கிடந்த உத்தமா சட்டையை கொத்தாக பிடித்து "டேய் எழுந்திரி டா... எழுந்திரி..."என்று கத்த...

أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???